• General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
Wednesday, May 31, 2023
Tamil Wire
No Result
View All Result
  • Login
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Health

‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

Minerva by Minerva
January 4, 2023
in Health, International, National
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

READ ALSO

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

பவானி ஆற்றில் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் இன்று(30-12-2022) நடந்தது.

KMCNSA-176-min

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், நரம்பியல் துறை சார்பில் போலீசாருக்கு முதுகு வலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்க புதிய பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

KMCNSA-195-min

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மேடையில் கூறியதாவது:-

          சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 1,000 படுக்கை வசதிகளுடன், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு ஆஸ்பத்திரி. ஏனென்றால் சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது. அதற்காக 4 ஆண்டுகள் முயற்சித்தேன் ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டராக வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஆரோக்கியமான விஷயமாகும். பொதுவாகவே போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு, உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் 3-வது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

KMCNSA-470-1-min

பேராசிரியர் டாக்டர் கோடீஸ்வரன் நரம்பியல் தலைமையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
Previous Post

பவானி ஆற்றில் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

Next Post

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

Related Posts

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
Health

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

April 27, 2023
பவானி ஆற்றில்  மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
General

பவானி ஆற்றில் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

December 23, 2022
பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்
International

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்

December 22, 2022
இலங்கை அதிபர் கோட்டாபய உட்பட 19 பேர் தப்பி ஓடும் முயற்சியில் – உகண்டாவில் இருந்து மத்தளவுக்கு விரையும் ஜெட்!
International

இலங்கை அதிபர் கோட்டாபய உட்பட 19 பேர் தப்பி ஓடும் முயற்சியில் – உகண்டாவில் இருந்து மத்தளவுக்கு விரையும் ஜெட்!

July 12, 2022
பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!
International

பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

September 2, 2022
SriLanka
International

இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

July 9, 2022
Next Post
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Tamil Wire

© 2022 Tamilwire .

Navigate Site

  • Buy Domains
  • Health Blog
  • Neuro

Follow Us

No Result
View All Result
  • Homepages
    • Home Page 1
    • Home Page 2
  • Politics
  • National
  • Entertainment
  • Fashion
  • Food
  • Health
  • Lifestyle
  • Opinion
  • Science
  • Tech
  • Travel

© 2022 Tamilwire .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Terms and Conditions - Privacy Policy